மானாமதுரையில் சாலை ஓரம் கொட்டப்பட்டுள்ள காலாவதியான திண்பண்டங்கள்

மானாமதுரையில் சாலை ஓரமாக காலாவதியான சிறுவர்கள் சாப்பிடும் திண்பண்டங்கள் கொட்டப்பட்டுள்ளது.

Update: 2023-12-24 12:59 GMT

சாலையில் கொட்டப்பட்டுள்ள தின்பண்டங்கள்

மானாமதுரையில் காலாவதியான உணவு பொருட்களை முறையாக அழிக்காமல் ரோட்டோரம் குவியல்,குவியலாக கொட்டப்பட்டுள்ளது. மானாமதுரை மற்றும் சுற்று வட்டார கடைகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தி காலாவதியான சிறுவர்கள் சாப்பிடக்கூடிய தின்பண்டங்கள் மற்றும் உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் மானாமதுரை பைபாஸ் ரயில்வே கேட் அருகே உள்ள ரோட்டோரமாக காலாவதியான தின்பண்டங்கள் மூடை மூடையாக கொட்டப்பட்டுள்ளது.

இதனை குழி தோண்டி புதைக்காமல் விட்டு சென்றுள்ளதால் சிறுவர்கள் தெரியாமல் எடுத்து சாப்பிட்டால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்

Tags:    

Similar News