தலைவாசல் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த தேன் வண்டுகள் அழிப்பு

தலைவாசல் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த தேன் வண்டுகள் அழிக்கப்பட்டது.

Update: 2024-07-05 15:43 GMT

தலைவாசல் 

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நாவலூர் ஊராட்சியில் உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த ரேவதி என்பவரின் விவசாய தோட்டத்தில் உள்ள மரத்தில் தேன்வண்டுகள் கூடுகட்டி அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை அவ்வப்பொழுது கடித்து வந்தது.

இதனை அடுத்து கெங்கவல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே நேற்று இரவு மரத்தில் இருந்த தேன்வண்டு கூட்டின் மீது தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து அழித்தனர்.

Tags:    

Similar News