அதிராம்பட்டினத்தில் கண்பரிசோதனை முகாம் 

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற கண் பரிசோதனையில் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Update: 2024-01-27 11:55 GMT
அதிராம்பட்டினம் கண்பரிசோதனை முகாம் 
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில், லயன்ஸ் சங்கம், பன்னாட்டு தொழிலதிபர் அப்துல் மஜீத் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கண் பரிசோதனை முகாமை நடத்தினர்.  நிகழ்ச்சிக்கு, லயன்ஸ் சங்க தலைவர் குப்பாஷா அகமது கபீர் தலைமை வகித்தார். செயலாளர் ஹாஜா நசூருதீன் வரவேற்றார். பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை கண் பரிசோதனை முகாமைத் தொடங்கி வைத்தார்.  முன்னாள் லயன்ஸ் மாவட்ட ஆளுநர் முருகன் வாழ்த்திப் பேசினார். இதில், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பரிசோதனை முகாமில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவக் குழுவினர் வந்திருந்தவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.  இதில், 275 நபர்கள் கலந்து கொண்டனர். 75 நபர்களுக்கு கண்புரை இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சைக்காக மதுரை அழைத்துச் செல்லப்பட்டனர். நிறைவாக பொருளாளர் நியாஸ் அகமது நன்றி கூறினார்.
Tags:    

Similar News