சுரண்டையில் நவ.25 இல் கண் பரிசோதனை முகாம்

சுரண்டையில் கண் மருத்துவ முகாம்

Update: 2023-11-23 05:40 GMT

கண் பரிசோதனை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டையில் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை (நவ.25) நடைபெறுகிறது. தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி, திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இந்த முகாம், சுரண்டை ஸ்ரீமுப்பிடாரி அம்மன் கோயில் உள்அரங்கில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். இம்முகாமில் பீடித் தொழிலாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா், பொதுமக்கள் பங்கேற்று இலவச கண் பரிசோதனை செய்து கொள்ளலாம்.கண்புரை அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அன்றைய தினமே திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்யப்படும். மேலும், முகாமில் குறைந்த விலையில் கண் கண்ணாடிகள் வழங்கப்படும் என முகாம் ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.
Tags:    

Similar News