சாலைமறியலில் ஈடுபட்ட நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் கைது

ராமநாதபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-02-19 03:05 GMT
ராமநாதபுரம் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாநில துணைத்தலைவர் தினகரன் மற்றும் மாநில செயலாளர் மாரிமுத்து தலைமையில் பொது விநியோகத்திற்கு தனி துறை, பழைய பென்ஷன் திட்டம், உணவு பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலங்களாக வழங்குதல், அனைவருக்கும் ஓய்வூதியம் மற்றும் பத்து அம்ச கோரிக்கையிணை நிறைவேற்றாததை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலையில் போராட்டம் செய்தவர்களை கேணிக்கரை போலீசார் கைது செய்து தனியார் மஹாலில் அடைத்தனர்.
Tags:    

Similar News