கிணற்றுக்குள் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

அரூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த ஆட்டினை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய விவசாயி உயிரிழந்தார்.

Update: 2024-04-18 05:13 GMT

 அரூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த ஆட்டினை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய விவசாயி உயிரிழந்தார். 

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டி. துரிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் இவருக்கு வயது 58 விவசாயம் செய்து வரும் இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் ஆடு தவறி விழுந்துவிட்டது .அதை மீட்பதற்காக அன்பழகன் கிணற்றுக்குள் இடுப்பில் கயிறு கட்டி இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக கயிறு அறுந்து விட்டதால் அன்பழகன் கிணற்றுக்குள் தவறு விழுந்துவிட்டார்.

காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தினர் அங்கு அன்பழகனுக்கு சிகிச்சைகள் அளித்தும் நேற்று அவர் உயிரிழந்தார் இது தொடர்பாக அரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News