திண்டிவனம் அருகே விவசாயி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கூடலூர் பகுதியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-12 05:00 GMT

தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள கீழ் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் மகன் தேவராஜ் 40, குடும்ப பிரச்சனை காரணமாக அதிக அளவில் மது அருந்தியுள்ளார். இந்நிலையில் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்டு ஜிப்மர் அரசு மருத்துவமனையில் சேர்த்து நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News