விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

பழனி அருகே விவசாய நிலங்களில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்தநிலையில், கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-08 08:18 GMT

பழனி அருகே விவசாய நிலங்களில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்தநிலையில், கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

பழனி அருகே ஆயக்குடி, கோம்பைபட்டி மற்றும் வரதமாநதி அணை பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் காட்டுயானைகள் தொந்தரவு அதிகரித்துள்ளது. பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்னை மா விவசாயிகள் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை இட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
Tags:    

Similar News