நகை,பத்திரங்களை எடுத்து சென்ற மருமகன் மீது மாமனார் புகார்

கோவை சரவணம்பட்டியில் வெளிநாட்டில் இருக்கும் மகளுக்கு தெரியாமல் அவரது அனுமதியின்றி நகை மற்றும் பாத்திரங்களை எடுத்து சென்ற மருமகன் மீது மாமனார் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2024-01-31 13:15 GMT

பைல் படம்

கோவை: சரவணம்பட்டி அத்திபாளையம் சாலை ஆதி திராவிடர் வீதியில் வசித்து வருபவர் ரமேஷ்(60).இவரது மகள் கனடாவிலும் மருமகன் நவீன் மும்பையிலும் உள்ளனர்.இருவரும் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் வங்கியில் கூட்டு கணக்கு வைத்துள்ள நிலையில் லாக்கரில் இருந்த பத்திரம்,கனடா நாட்டு டாலர்,மற்றும் 30 பவுன் தங்க நகைகளை மகளுக்கு தெரியாமல் அவரது அனுமதியின்றி நவீன் எடுத்து சென்று ஏமாற்றிவிட்டதாக கோவை ஜே.எம்.இரண்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News