மகனை கொன்ற தந்தை கைது!

அறந்தாங்கி அருகே பிடாரிகாடு கிராமத்தில் மகனை கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-29 09:51 GMT

பைல் படம்

அறந்தாங்கி அருகே பிடாரிகாடு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா(64). இவரது மகன் பாலகிருஷ்ணன்(35). இவர்கள் இருவருக்கும் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த கருப்பையா மகனை வேகமாக தள்ளிவிட்டார். இதில் நிலைதடுமாறிய பாலகிருஷ்ணன் வீட்டுத் திண்ணையில் இருந்த கல்லின் மீது விழுந்தில் தலையில் பலத்த காயம் டைந்து அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிந்து கருப்பையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News