ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் வர்ஷாபிஷேக விழா

திருவட்டார் ஆதிகேசிவ பெருமாள் கோவிலில் வருஷாபிஷேக விழா வரும் 12 ம் தேதி நடைபெறுகிறது.

Update: 2024-06-29 07:24 GMT

திருவட்டார் ஆதிகேசிவ பெருமாள் கோவிலில் வருஷாபிஷேக விழா வரும் 12 ம் தேதி நடைபெறுகிறது.


108 வைணவத்தலங்களுள் ஒன்று திருவட்டார் ஆதிகே சவபெருமாள் கோவில்.இங்கு 418 ஆண்டுகளுக்கு பின் னர் கடந்த 2022 ஆண்டு ஆனி மாதம் உத்தரம் நட்சத்திரத் தில் கும்பாபிஷேகம் நடந்தது. அதை கணக்கில் கொண்டு ஆனி மாத உத்தரம் நட்சத்திர நாளான அடுத்த மாதம் (ஜூலை) 12-ந் தேதி வருஷா பிஷேகம் நடக்கிறது.அன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடைதிறக் கப்பட்டு நிர்மால்ய தரிசனம் நடைபெறும். தொடர்ந்து சாமி கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்தில்எழுந்தருளல், நவகலச அபி ஷேகம், கணபதி ஹோமம், சுகிர்த ஹோமம் ஆகியவை நடக்கிறது.

பின்னர் உதய மார்த்தாண்ட மண்டபத் தில் 25 கலசங்களுடன் சிறப்பு பூஜை நடைபெறும். பூஜையை கோகுல் தந்திரி நடத்துகிறார்.பின்னர் ஆதிகேசவபெரு மாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதே விக்கு 25 கலசங்களில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் சிறப்பு அபிஷேகம், கிருஷ்ண சாமி, அய்யப்ப சாமி, குலசேகரப்பெருமாள் ஆகியோருக்கு நவ கலச அபிஷேகம், தீபாரா தனை ஆகியவை நடக்கிறது. மதியம் சிறப்பு அன்னதானமும், மாலையில் அலங்கார தீபாராதனை யும், தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் உள்ள விளக் குகளுக்கு ஒளியேற்றும் லட்சதீப விழாவும் நடக் கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு விளக் கேற்றுகின்றனர்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும் பக்தர்களும் செய்து வருகி றார்கள்.

Tags:    

Similar News