பேராவூரணி நகர திமுக சார்பில் திண்ணைப் பிரச்சாரம்

பேராவூரணி நகர திமுக சார்பில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது.

Update: 2024-02-28 03:50 GMT

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர், கா.அண்ணாதுரை எம்எல்ஏ, பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, பேராவூரணி பேரூர் கழகம் சார்பில், பேரூர் கழகச் செயலாளர் என்.எஸ்.சேகர் ஏற்பாட்டில், பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட ஆதனூர் பகுதியில், "இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்" பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் தலைமை வகித்தார். மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் அசோக் ராணி, மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் தீப லட்சுமி ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.  இதில், திமுகவினர் ஒவ்வொரு வீடாகச் சென்று மகளிருக்காக திமுக அரசு செய்துள்ள சிறப்பான திட்டங்களை முன்னிலைப்படுத்தி எடுத்துக் கூறி பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தனர்.  இந்த நிகழ்வில், பேராவூரணி நகர துணைச் செயலாளர் சரவணன், முத்துச்சாமி,  முன்னாள் நகரக் கழகச் செயலாளர் அச்சகம் நீலகண்டன் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் கழக முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News