குமாரபாளையத்தில் களைகட்டிய இறுதி கட்ட பிரச்சாரம்

குமாரபாளையத்தில் இறுதி கட்ட பிரச்சாரம் களைகட்டியது.

Update: 2024-04-18 05:19 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இறுதி கட்ட பிரச்சாரம் களைகட்டியது.ஏப்.19ல் லோக்சபா தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி, அரசியல் கட்சியினர் பிரசாரப்  பணிகளையும், அரசு அதிகாரிகள் தேர்தல் நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்வதிலும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.   அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆகியோர் திறந்த வேனில் நின்றபடி, இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். ராஜம் தியேட்டர் முன்பிருந்து, நகராட்சி அலுவலகம் வரை சுமார் 2 கி.மீ. தூரம் அ.தி.மு.க. தொண்டர்கள், மகளிரணியினர், பெருமளவில் பங்கேற்று ஊர்வலமாக வந்தனர். எங்கள் வாக்கு, இரட்டை இலைக்கே, ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம், என்றவாறு பதாதைகளை கைகளில் ஏந்தியபடி கோஷமிட்டபடி வந்தனர். இதே போல் தி.மு.க.வினர் வார்டு வாரியாக தீவிர பிரச்சாரம் செய்து, வேட்பாளர் பிரகாஷ்க்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டனர். பா.ஜ.க. கூட்டணியில் த.மா.கா. வேட்பாளர் விஜயகுமார், தனது ஆதரவாளார்களுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
Tags:    

Similar News