மின்வாரிய அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து

வாசுதேவநல்லூர் மின் வாரிய அலுவலகத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் அணைத்தனர்.

Update: 2024-04-28 02:47 GMT

தீ விபத்து 

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே வாசுதேவநல்லூர் மின் வாரிய அலுவலகத்தில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த மின்வாரிய அலுவலகத்தில் மின் கசிவு ஏற்பட்டதால் தீ மளமளவென பரவியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த வாசுதேவநல்லூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு ஈடுபட்டனர். தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இதை கண்ட பகுதி பொதுமக்களும் மின்வாரிய ஊழியர்களும் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News