தைலமரக்காட்டில் தீ விபத்து!
பொன்னமராவதி அருகே கருவேல மரக்காட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு நிலையத்தில் இருந்து மீட்பு படையினர் வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
Update: 2024-04-06 04:41 GMT
பொன்னமராவதி அருகே உள்ள வாழைக்குறிச்சி ஊராட்சி நெய்வேலி கிராமத்துக்கு உட்பட்ட தைல மரக்காடு மற்றும் கருவேல மரக்காட்டில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அருகில் உள்ள குளம் மற்றும் தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து அணைக்க முயன்றனர். சிறிது நேரத்தில் பொன்னமராவதி மற்றும் திருமயம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து மீட்பு படையினர் வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.