தேசிய நெடுஞ்சாலையில் ஓடிய காரில் தீ விபத்து

விருதுநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓடிய காரில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-05-24 17:03 GMT
தேசிய நெடுஞ்சாலையில் ஓடிய காரில் தீ விபத்து

 விருதுநகர் அருகே ஆவல் சூரன்பட்டி என்ற இடத்தில் , சிவகாசியில் இருந்து பாலக்காடு செல்வதற்காக மாருதி காரில் நசரத் என்பவர் தனது நண்பருடன் வந்து கொண்டிருந்த போது, மதுரை - நெல்லை நான்கு வழிச்சாலையில் திடீரென காரின் முன் பகுதியில் புகை கிளம்பியது.

அதனை தொடர்ந்து, தீப்பற்றி மல மள எரிய துவங்கிய போது, காரினுள் இருந்த நசரத் மற்றும் அவரது நண்பர் உடனடியாக காரில் இருந்து வெளியேறினர் . காரில் எரிந்த தீ 30 நிமிடத்திற்கு மேலாக மல மள எரிய தொடங்கி கார் முழுவதும் எலும்பு கூடானது .அதன் பின் வந்த தீயணைப்புத் துறையினர் காரில் இருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

நசரத் மற்றும் அவரது நண்பர் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . இச் சம்பவம் குறித்து கள்ளிக்குடி காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News