தொடக்கப்பள்ளியில் தீ விபத்து

சிவகங்கை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீ விபத்து நடந்ததால் பரபரப்பு.

Update: 2023-12-04 14:45 GMT

சிவகங்கை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீ விபத்து நடந்ததால் பரபரப்பு.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை அருகே பாகனேரி புதுவளவில் செயல்பட்டு வருகிறது அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. இப்பள்ளியில் மதகுபட்டி, காடனேரி, அம்மன்பட்டி, ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை அப்பள்ளியில் காலை உணவு சமைப்பதற்காக கேஸ் அடுப்பினை பற்றி வைத்த நிலையில் திடீரென தீ கசிவு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த பள்ளி மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதனையடுத்து சிவகங்கை தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் நாகராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துரிதமாக செயல்பட்டு தீயிணை அணைத்தனர். இதனால் பெறும் சேதம் தவிர்க்கப்பட்டது.

Tags:    

Similar News