மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து

திண்டுக்கல் அருகே மரக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2024-05-30 11:58 GMT

 தீ விபத்து 

திண்டுக்கல் அருகே மரக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.திண்டுக்கல் மேட்டுப்பட்டி சந்தை சாலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் ஸ்ரீ கிருஷ்ணா ஹார்டுவேர்ஸ் ப்ளைவூட்ஸ் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.இந்த கடையில் உள்ள அனைத்து பொருட்களும் சேதமடைந்தன. அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் மற்ற கடைகளுக்கும் தீ பரவவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இது குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News