மின்கசிவினால் தீவிபத்து - ரூ.1லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

விழுப்புரம் அருகே மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் சேதமடைந்தது.

Update: 2024-03-19 07:08 GMT

தீ விபத்து 

விழுப்புரம் அருகே மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் சேதமடைந்தது. விழுப்புரம் அடுத்த தென்னமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம்முருகன்(48) அங்குள்ள இவரது பழைய ஓட்டு வீட்டின் உள்ளே, கடந்த 16ம் தேதி இரவு 9 மணிக்கு, மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்றியது. இதனால், வீட்டிலிருந்த டிவி, பீரோ, கட்டில் மற்றும் ஆவணங்கள் என ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து, ஓம்முருகன் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News