தைல மரக்காட்டில் தீ விபத்து !

தைல மரக்காட்டில் தீ விபத்து திருமயம் தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.

Update: 2024-03-07 05:32 GMT
தைல மரக்காட்டில் தீ விபத்து திருமயம் தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர். திருமயம் ஒன்றியம் கண்ணார் பகுதியில் ராங்கியம் பனையப்பட்டி சாலையோரம் வனத்தோட்ட கழகம் சார்பில் ஆயிரத்து 500 ஏக்கரில் தைலமரங்கள் வளர்க் கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் தைல மரக்காட்டில் இடந்த காய்ந்த சருகுகளில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. திருமயம் தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். தீ விபத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த தைல மரங்கள் கருகி சேதமடைந்தன. வனப்பகுதியில் கால்நடைகளை மேய்த்தவர் கள் புகைபிடித்துவிட்டு நெருப்பை அணைக்காமல் வீசி சென்றதால் தீ விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
Tags:    

Similar News