பொம்மை குடோனில் தீ விபத்து

அரியமங்கலம் பால்பண்ணை அருகே பொம்மை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

Update: 2024-02-26 02:34 GMT

தீ விபத்து 

திருச்சி காந்தி மாா்க்கெட்- அரியமங்கலம் சாலையில் (பழைய பால்பண்ணை அருகே) உள்ள விஸ்வாஸ்நகா் முதல் தெருவில் தனியாருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் பொம்மைகள் குடோனில் ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டு, வேகமாக தீ பரவியது. தகவலறிந்து கண்டோன்மென்ட், ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையங்களிலிருந்து விரைந்து வந்த வீரா்கள் தீயை அணைத்தனா். இருப்பினும் பல லட்சம் மதிப்பில் பொருள்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Tags:    

Similar News