நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

தேனி அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2024-04-25 08:54 GMT

சிறை தண்டனை விதிக்கப்பட்டது

தேனி மாவட்டம் மயிலாடும்பாறை காவல்துறையினர் கடந்த 2020 ஆம் ஆண்டு 4 கிலோ கஞ்சா மற்றும் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் முருகன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கு விசாரணை மதுரை EC மற்றும் NDPS சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கின் தீர்ப்பு நேற்று முருகனுக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஹரிஹர குமார் தீர்ப்பளித்தார்

Tags:    

Similar News