பகலில் ஒளிரும் விளக்கு - மின் ஊழியர்கள் அலட்சியம்

ஒரு வாரமாக இரவு, பகல் என, 24 மணி நேரமும் மின்விளக்கு தொடர்ந்து ஒளிர்கின்றது

Update: 2024-02-25 08:49 GMT

பகலில் ஒளிரும் விளக்கு

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட வைப்பூர் ஊராட்சியில், கிராம உட்புற சாலைகளில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரு மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இங்கு கடந்த வாரம் தெரு மின்விளக்கு 'சுவிட்ச்' பழுதடைந்ததால், பகல் நேரங்களில் தெரு மின்விளக்குகளை அணைக்க முடியவில்லை. இதனால், கடந்த ஒரு வாரமாக இரவு, பகல் என, 24 மணி நேரமும் மின்விளக்கு தொடர்ந்து ஒளிர்கின்றது. இதனால், மின்சாரம் வீணாகுவதோடு, பல்புகளும் குறுகிய காலத்தில் பழுதடைகின்றன. எனவே, மின் விளக்குகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News