ஓசூர் அருகே ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்
ஓசூர் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.50 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-03-26 08:19 GMT
பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் அதிகாரிகள்
கர்நாடக மாநிலம் அனேக்கல் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் வயது 35 அவர் வீடு கட்டுவதற்காக வங்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு ஓசூரில் கட்டுமான பொருட்களை வாங்க மினி லாரியில் சென்றார் , அப்பொழுது அவருடைய வாகனத்தை பறக்கும் படையினர் பூனப்பள்ளி பகுதியில் உள்ள சோதனை சாவடியில் சோதனை செய்தனர். அப்பொழுது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தொகையை ஒசூர் சார் ஆட்சியர் பிரியங்காவிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.பின்னர் அவர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்