கள்ளக்குறிச்சி விவகாரம்; முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் இருவர் அனுமதி

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக கள்ளச்சாராயம் குடித்த இரண்டு பேர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-06-22 07:44 GMT

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக கள்ளச்சாராயம் குடித்த இரண்டு பேர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய, விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா சித்தேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த பிரவீன், ஜெகதீஷ் ஆகிய இருவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி,இவர்கள் இருவரும் அவர்களது நண்பர்களுடன் கடந்த 3 நாட்களுக்கு முன் சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் சென்று சாராயம் குடித்துள்ளனர். ஏற்கனவே இருவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இருவர் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளணர்.
Tags:    

Similar News