அணைக்க மறந்த கேஸ் அடுப்பு - தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதம்

கேஸ் அடுப்பை அணைக்காமல் வெளியே சென்றதால் தீ விபத்து ஏற்பட்டு பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

Update: 2023-10-22 07:00 GMT
தீயை அணைக்கும் பணி 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மயிலாடுதுறை தரங்கைச் சாலை கொத்தத்தெருவில் உள்ள குடியிருப்பு பகுதியில் கணேசன்(40) என்பவர் அறை ஒன்றை  வாடகைக்கு எடுத்து நகை பாலிஷ் மற்றும் நகை சம்பந்தமான தொழில் பார்த்துவருகிறார். 5 கிலோ காஸ் சிலிண்டர்மூலம் வேலையை செய்துவந்தார். இன்று வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தபோது அவசரமாக கடைவீதிக்குச் சென்றுள்ளார், ஆனால் காஸ் அடுப்பை அணைக்காமல் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டார், சிறிதுநேரத்தில் அடுப்பிலிருந்த தீ பக்கத்திலிருந்த பொருட்கள்மீது பரவி மளமளவென எரியத்தொடங்கியது, உடனடியாக அருகில் உள்ள மயிலாடுதுறை தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்து சிலிண்டரை அப்புறப்படுத்தினர். அறைக்குள் இருந்த தட்டுமுட்டு சாமான்கள் மட்டும் எரிந்து நாசமாகியது. 

Tags:    

Similar News