அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிக்கல் நாட்டு விழா

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது.

Update: 2024-03-13 01:31 GMT

அடிக்கல் நாட்டு விழா

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூபாய் 410.12 இலட்சம் மதிப்பீட்டில் புதிய 9 வகுப்பறைகள், ஆய்வகம் மற்றும் கழிவறை உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளனர்.
Tags:    

Similar News