சார்பதிவாளர் அலுவலக கட்டிட பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

திருநெல்வேலி மாவட்டம்,மேலப்பாளையத்தில் சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

Update: 2024-02-09 08:18 GMT

சார்பதிவாளர் அலுவலக கட்டிட பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் ஒரு கோடியே 83 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. பாளை எம்எல்ஏ அப்துல் வஹாப் கலந்து கொண்டு புதிய சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ராஜு, நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News