நகா்ப்புற நலவாழ்வு மைய கட்டடத்திற்கு அடிக்கல்

கடையநல்லூா் நகராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலான நகா்ப்புற நல வாழ்வு மைய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

Update: 2024-02-11 07:10 GMT
அடிக்கல் நாட்டு 
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சி 33ஆவது வாா்டில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலான நகா்ப்புற நல வாழ்வு மைய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. புதிய கட்டடத்திற்கு, நகா்மன்ற உறுப்பினா் செய்யது அலி பாத்திமா முன்னிலையில் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் அடிக்கல் நாட்டினாா். நகா்மன்ற துணைத் தலைவா் ராசையா, நகராட்சி ஆணையா் சுகந்தி, பொறியாளா் அப்துல் காதா், உதவி பொறியாளா் கண்ணன், சுகாதார அலுவலா் பிச்சையா பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Tags:    

Similar News