விருதுநகர்: வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைத்தீர் கூட்டம்

விருதுநகரில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வரும் 8ஆம் தேதி நடைபெற உள்ளதால் விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனுவாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Update: 2024-01-05 01:58 GMT
வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைவிற்கும் நாள் கூட்டம் வரும் 8ஆம் தேதி நடைபெற உள்ளது
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் வரும் 9 ஆம் தேதி காலை 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடை பெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News