இலவச ஆதார் அட்டை திருத்தம் முகாம்

நாமக்கல் மாவட்டம்,குமாரபாளையத்தில் நடைபெற்ற இலவச ஆதார் அட்டை திருத்த முகாமில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Update: 2024-02-26 01:12 GMT

ஆதார் திருத்த முகாம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஜே.கே.கே. முனிராஜா கல்வி நிறுவன வளாகத்தில் இலவச ஆதார் அட்டை திருத்த முகாம் நடந்தது. ஜே.கே.கே. முனிராஜா கல்வி நிறுவன வளாகத்தில் இலவசமாக ஆதார் அட்டை திருத்த முகாம் கல்லூரி தாளாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆதார் என்பது தற்போது அத்தியாவசியம் என்பதால், இந்த முகாமில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.

தெளிவான படம், ரேகை பதிவு, எழுத்துப்பிழை இல்லாமை, உள்ளிட்ட பல்வேறு திருத்தம் பெற்ற ஆதார் அட்டையை அஞ்சல் துறை அதிகாரிகள் வசம் மாணவ, மாணவியர் பெற்றுக்கொண்டனர். முகாமை நடத்திய அஞ்சல்துறை அதிகாரிகளுக்கு கல்லூரி தாளாளர் ஜெயப்பிரகாஷ் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

Tags:    

Similar News