கரூரில் இலவச கண் பரிசோதனை முகாம்
கரூரில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
Update: 2024-06-30 07:46 GMT
கண் பரிசோதனை
. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை அருகே உள்ள திருநீலகண்ட நாயனார் குலாலர் சத்திரத்தில், கரூர் ஸ்ரீ ராஜகாக்கள் சுவாமி சேவா டிரஸ்ட் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க உதவியுடன் 9-ம் ஆண்டு நடத்தும் மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இன்று காலை 9 மணிக்கு துவங்கி மதியம் 1- மணி வரை நடைபெறும் இந்த முகாமில், கரூர் நகராட்சிக்குட்பட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், கண் பார்வை பாதிக்கப்பட்ட நபர்கள், முதியவர்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை மேற்கொண்டனர். மேலும், கண் பரிசோதனை செய்வதற்கு முன்பாக ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, பிரஷர், சுகர் போன்ற பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.