திருமணமாகாத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

லால்குடி அருகே நன்னிமங்கலத்தில் திருமணமாகாத விரக்தியில் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-06-25 10:42 GMT

பைல் படம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னிமங்கலம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் 41 வயதான அருண்பிரசாத். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் மன விரக்தியில் இருந்துள்ளார்.இந்நிலையில் தனக்கு திருமணம் நடைபெறவில்லை என மனமுடைந்த அருண் பிரசாத் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார்.

இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News