பேருந்து நிலையத்தில் விநாயகர் கோவில் : கோரிக்கை

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் விநாயகர் கோவிலை மீண்டும் அமைக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. 

Update: 2024-07-03 11:13 GMT

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் விநாயகர் கோவிலை மீண்டும் அமைக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.


தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் விநாயகர் கோவிலை மீண்டும் அமைக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.  இது தொடர்பாக இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்து குமார் ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த சிறிய தொழில் நகரமான தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அமைய பெற்ற காலத்திற்கு முன்பு குதிரைவண்டி மற்றும் கைவண்டி பயன்பாடு காலத்தில் இருந்தே சிறியதாக ஸ்ரீ விநாயகர் ஆலயமானது பூவரசு மரங்களுக்கிடையே பொதுமக்களின் பயண காவலாக யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் ஓரமாக பொதுமக்கள் வழிபாட்டில் இருந்து வந்தது.

இதனை 24.06.1982 அன்று சீரமைத்து நகராட்சி அதிகாரிகளின் அனுமதியிலும், பொதுமக்களின் ஒத்துழைப்பிலும் மூன்று நிலைகளாக விரிவு படுத்தி 'ஸ்ரீ வெற்றி விநாயகர்'- ஆலயத்தில் புதியதாக ‘ஸ்ரீ விநாயகர் சிலை' மற்றும் ‘ஸ்ரீ முர்ச்சையர்' வாகனம் சிலை ஆகியவைகளை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. அது நாள் முதல் 2018 ஜூன் மாதம் வரை 4 முறை கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.  மேலும் 1996-1997 காலகட்டத்தில் மின் இணைப்பு 07-344030249 பெறப்பட்டது. தொடர்ந்து 04.09.2019 வரை மாதம் 150 250 அலகு மின்சாரம் வீதம் பயன்பாடு செய்து முறையாக மின்கட்டணங்களை நிலுவையின்றி செலுத்தி வந்தோம். 

இந்நிலையில் அதுசமயம் இருந்த மாநகர ஆணையர் வைத்த வேண்டுகோள் மற்றும் அளித்த உறுதி மொழியை நம்பி மதிப்பளித்து இந்த பேருந்து நிலைய நவீனமயமாக்கல் பணிக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் முறையாக பாலாயனம் செய்து அந்த அத்தி மர கட்டையினை பேருந்து நிலைய வளாகத்திற்குள், வ.உ.சி சாலையில் சுரேஷ் மெடிக்கல்ஸ்-க்கு எதிர்புரம் வைத்திருந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி மேயர் உத்தரவின்படி அதையும் அகற்றிவிட்ட நிலையில் இன்றுவரை அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை ஏதும் எடுக்காது அலட்சியம் செய்கின்றனர். எனவே மீண்டும் நவீனமயமாக்கப்பட்ட பேருந்து நிலைய வளாகத்தில் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தினை நிறுவிட வேண்டி மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு பதிவு செய்திருந்தோம்.

எங்கள் மனுவானது தொடர் நடவடிக்கைக்காக தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  ஆனால் இதுவரை எவ்விதமான நடவடிக்கை எடுக்காமலும், எவ்வித தகவல் வழங்காமலும் எங்களை அழைய வைத்து மிகுந்த மனஉழைச்சலுக்குள்ளாக்குகின்றனர். எனவே மீண்டும் தங்களை நினைவூட்டும் விதமாக எங்கள் கோரிக்கைகளை மீண்டும் பதிவு செய்கின்றோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News