நெமிலி அருகே வெங்கடேச பெருமாள் கோவிலில் கருட சேவை

நெமிலி அருகே வெங்கடேச பெருமாள் கோவிலில் கருட சேவை நடந்தது.

Update: 2024-05-23 15:58 GMT

கருட சேவை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்வெண்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெற்றது.

முன்னதாக அதிகாலையில் மூலவரான ஸ்ரீதேவி, பூதேவி, வெங்கடேச பெருமாள் சிலைகளுக்கு நெய், பால், தயிர், சந்தனம், இளநீர், வாசனை திரவியங்கள் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு வேதமந்திரங்கள் ஓதியவாறு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இசை வாத்தியங்கள் முழங்க வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட வெங்கடேச பெருமாளின் திருவடிகளை கருடன் தன்னுடைய இரண்டு கைகளிலும் தாங்கியவாறு கருட சேவை திருவீதி உலா நடைபெற்றது.

இதில் திருமால்பூர், நெல்வாய், பனப்பாக்கம், ரெட்டிவலம், ஜாகீர்தண்டலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளாக பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News