போச்சம்பள்ளி அருகே கேஸ் சிலிண்டர் கசிவால் தீ விபத்து !

போச்சம்பள்ளி அருகே கேஸ் சிலிண்டர் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு வீடு முற்றிலும் எறிந்து சேதம் அடைந்தது.

Update: 2024-04-01 06:41 GMT

 தீ விபத்து

போச்சம்பள்ளி அருகே கேஸ் சிலிண்டர் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு வீடு முற்றிலும் எறிந்து சேதம் : வீட்டிலிருந்த பணம் நகை மற்றும் ஆவணங்கள் எரிந்து சேதம் அடைந்ததை கண்டு கதறி அழுத குடும்பத்தார் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாளேத்தோட்டம் ஊராட்சி திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராதா இவரது மகள்களான ராஜீ மற்றும் பிரியா ஆகியோர் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். இதில் ராதா மற்றும் அவரது குடும்பத்தார் ஆகியோர் போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூர் கிராமத்தில் உள்ள தனது மாமாவின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றுள்ளனர். அப்பொழுது வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு போன் செய்து தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைப்பதற்குள் தீ மளமளவென எரிந்து வீடு முழுவதும் எரிந்து சேதமானது. இதில் வீட்டிலிருந்த இரண்டு பீரோக்களில் வீடு கட்ட வைத்திருந்த ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணம் தங்க நகைகள் வெள்ளி பொருட்கள் முக்கிய ஆவணங்கள் எரிந்து முற்றிலும் சேதமானது. மேலும் வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போச்சம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வீடு தீ பிடித்து சேதமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை மனம் நிலைகுலை செய்தது.
Tags:    

Similar News