திருக்கோவிலுார் பண்பாட்டு கழகத்தின் பொதுக்கூட்டம்

திருக்கோவிலுார் பண்பாட்டு கழகத்தின் பொதுக்கூட்டம்

Update: 2024-06-24 05:41 GMT

 பொதுக்கூட்டம்

திருக்கோவிலுார் பண்பாட்டு கழகத்தின் சார்பில் ஆண்டு தோறும் கபிலர் விழா நடைபெறும். அதன்படி 47ம் ஆண்டு கபிலர் விழா வரும் 19ம் தேதி திருக் கோவிலுார் சுப்ரமணிய மஹால் திருமண மண்டபத்தில் 3 நாட்கள் நடக்கிறது. இதற்கான விழா நிகழ்ச்சி நிரல் குறித்து ஆய்வு செய்வதற்கான பொதுக்குழு கூட்டம் நேற்று மணம்பூண்டியில் நடந்தது. பண்பாட்டுக் கழக துணைத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செயல் தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் மூர்த்தி விழா நிகழ்ச்சி நிரல் குறித்து விளக்கினார். சுப்பிரமணியன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் நடராஜன் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News