8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை

போச்சம்பள்ளி ஆட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி 8, கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.

Update: 2024-06-16 13:11 GMT

போச்சம்பள்ளி ஆட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி 8, கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை - கர்நாடக ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் குவிந்தனர். நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி புகழ்பெற்ற வாரச்சந்தையில் இன்று வழக்கத்தை விட சுமார் 6, ஆயிரத்திற்கும் மேற்பட்டஆடுகள் விற்பனைகாக கொண்டுவரப்பட்டன.

கிருஷ்ணகிரி, தருமபுரி, ஒசூர் மற்றும் கர்நாடகா,ஆந்திரா, மாநிலங்களில் இருந்து விற்பனைக்காக கொண்டுவந்தனர். அதிகாலை 5 மணி முதல் சந்தையில் ஆடுகள் விற்பனை துவங்கிய நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூர், கோலார், மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம், சித்தூர், மற்றும் தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி போன்ற இடங்களில் இருந்து வியாபாரிகள் பொதுமக்கள் என சுமார் 20 ஆயிரம் பேர் குவிந்தனர். வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு ரூ 15, ஆயிரத்திற்கு விலை போகும் ஆனால் பக்ரீத் பண்டிகை விற்பனை என்பதால் சற்று விலை அதிகரித்து 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு ரூ 17 ஆயிரம் முதல் ரூ 20 ஆயிரம் வரையில் விலை போனது.

இதேபோல் எடைக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் ஒரு ஜோடி ஆடு ரூபாய் 25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 80 ஆயிரம் வரையில் விற்பனை ஆனாது. இன்று ஒரு நாளில் மட்டும் போச்சம்பள்ளி வார சந்தையில் சுமார் 8, கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனாதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News