திருச்சி விமானநிலையத்தில் ரூ.19.17 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமானநிலையத்தில் ரூ.19.17 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-12-21 11:15 GMT
திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணியை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த பொழுது அவர் வயிற்றில் 20 ஓவல் வடிவ பாக்கெட்டுகள் இருந்தது எக்ஸ்ரேயில் தெரிய வந்தது. இதனை அடுத்து அவர்கள் மருத்துவர்கள் உதவியுடன் அவர் உடலில் இருந்த 20 பாக்கெட்டைகளை பிரித்து சோதனை செய்த பொழுது அதில் ரூபாய் 19 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 36 கிராம் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனை அடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் நீதிபதிகள் உத்தரவுப்படி அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறார் ர் இது குறித்து விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News