மேட்டூரில் அரசு பள்ளி நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா

சேலம் மாவட்டம்,மேட்டூரில் அரசு பள்ளி நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா.

Update: 2024-02-16 06:10 GMT

 பாராட்டு விழா.

மேட்டூர் அருகே மேச்சேரியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1,327 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் முன்னாள் படித்த மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள், தொழிலதிபர்கள் சார்பில் ரூ. 25 லட்சம் மதிப்பில் 200 பென்ஞ், டெஸ்க்குகள் பள்ளிக்கு வழங்கப்பட்டது. இவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்,சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வகணபதி அரசு பள்ளிக்கு பெஞ்ச் டெஸ்க் வாங்க நன்கொடை வாங்கியவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சகுந்தலா ,மேச்சேரி ஒன்றிய திமுக செயலாளர் சீனிவாச பெருமாள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆறுமுகம்(திமுக) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News