தொப்பூர் கணவாயில் அரசு பேருந்து விபத்து: எம்எல்ஏ நேரில் ஆய்வு

தொப்பூர் கணவாய் பகுதியில் அரசு பேருந்து விபத்து தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் நேரில் சென்று ஆய்வு செய்தார்

Update: 2024-06-14 13:42 GMT

எம்எல்ஏ ஆய்வு

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் காலை அரசு பேருந்து விபத்துக்கு உள்ளானது. இந்த பேருந்து தருமபுரி நகர போருந்து நிலையத்தில் இருந்து மாவட்டஆட்சியர், நல்லம்பள்ளி,கீழ்பூரிக்கல் வழியாக செக்காரப்பட்டி வரை காலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்லும் பொதுமக்கள் சுமார் 50 மேற்பட்டோர் இந்த பேருந்தில் பயணம் செய்தனர்.

இந்த நிலையில் இன்று காலை திடீரென தொப்பூர் ஆஞ்சநேயர் கோவில் கணவாய் அருகில் ஒட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து வலது புறமாக மரத்தில் மோதியது.

இதனால் பொது மக்களுக்கும், பயணிகளுக்கும் எந்த உயிர் சேதாரம் இல்லாமல் மரத்தில் மோதி நின்றது. உடனடியாக தகவல் தெரிந்த உடன் உடனடியாக தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் நேரில் சென்று பணிமனை மேலாளர் மற்றும் ஒட்டுனர்,

நடத்துனரிடம் பேருந்து விபத்துக்கள் எப்படி நடந்தது என்று ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News