மனைவி இறந்த துக்கம் : தீக்குளித்து உயிரை விட்ட இளைஞர்!

மனைவி இறந்த துக்கத்தில் இளைஞர் தனக்குத் தானே தீ வைத்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-17 08:59 GMT

மனைவி இறந்த துக்கத்தில் இளைஞர் தனக்குத் தானே தீ வைத்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 26).கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பாக மனைவி தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். அதனால் சோகத்தில் வந்த பாலமுருகன் அணைக்கட்டு அருகே உள்ள காப்புக் காட்டின் நடுவே செல்லும் சாலையில் குடி போதையில் தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து தன்மீது ஊற்றிக்கொண்டு தனக்குத்தானே தீ வைத்து எரித்துக் கொண்டார்.

இதனை அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பார்த்து பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளிகொண்டா போலீசார் சடலத்தை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News