எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் முகாம் - 45 மனுக்களுக்கு தீர்வு

உயர் அலுவலர்கள் பங்கேற்பு

Update: 2023-12-07 06:10 GMT

எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் முகாம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் தென் மண்டல காவல்துறை தலைவர் நரேந்திரன் நாயர் மற்றும் இராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் துரை வழிகாட்டுதலின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த் தலைமையில் (06.12.2023) இன்று புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர்கள், கலந்து கொண்டனர். இம்முகாமில் நிலுவையில் இருந்த 12 மனுக்களும், புதிதாக கொடுக்கப்பட்ட 33 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அலுவலகத்தில் தெரிவித்தனர்.
Tags:    

Similar News