குறை தீர்க்கும் நாள் முகாம்

விருதுநகர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் வாரந்திர குறை தீர்க்கும் நாள் முகாம் நடந்தது.

Update: 2024-02-15 03:31 GMT

விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்திரகுறை தீர்க்கும் நாள் முகாம் நடை பெற்றது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து பொதுமக்கள் மற்றும் காவலர்களின் வாரந்திர குறை தீர்க்கும் நாள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்களால் நடத்தப்பட்டது.

மேலும் புகார் மனு குறை தீர்க்கும் நாளில் பொதுமக்களிடமிருந்து 14 புகார் மனுக்கள் பெறப்பட்டு, மேற்படி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டி சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, மேலும் காவலர்களிடமிருந்து 10 மனுக்கள் பெறப்பட்டு, மேற்படி மனுக்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News