கள்ளக்குறிச்சியில் காவல் துறை குறைதீர் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சார்பில் குறைதீர்வு கூட்டம் நடந்தது.

Update: 2024-02-29 05:00 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சார்பில் குறைதீர்வு கூட்டம் நடந்தது.


கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சார்பில் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கையில், திருப்தி பெறாத புகார்தாரர்களுக்கான குறைதீர் கூட்டம் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்தது.ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன் தாலைமை தாங்கி, மனுக்களை பெற்றார்.

இதில் ஏற்கனவே பெறப்பட்ட 9 மனுக்களில் 8 மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது. நிலுவையில் உள்ள ஒரு மனுதாரரின் குறைகளை கேட்டறிந்து, அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து புதியதாக நேற்று 51 புகார் மனுக்கள் பெறப்பட்டது.

கூட்டத்தில் டி.எஸ்.பி., மகேஷ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

Tags:    

Similar News