பாலியல் குற்றவாளி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.

எஸ் பி பரிந்துரை, ஆட்சியர் உத்தரவின் பேரில் பாலியல் குற்றவாளி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.

Update: 2023-11-24 13:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பாலியல் குற்றவாளி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி அருகே உள்ள அய்யம்பாளையம், காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஷியாம் பாபு சர்மா வயது 37 என்பவர் மீது, கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி பாலியல் குற்றச்சாட்டில் தொடர்புடையவர் என கரூர் ஊரக அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஜாம் பாபு சர்மா மீது, உரிய நடவடிக்கை எடுக்க கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்கொண்ட பரிந்துரையின் பெயரிலும், கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரிலும், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், சிறப்பாக புலன் விசாரணை செய்து எதிரியை குண்டர்த்தடுப்பு சட்டத்தில் கைது செய்த, கரூர் ஊரக உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் கரூர் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார். மேலும், கரூர் மாவட்டத்தில் பொது மக்களுக்கு இடையூறு செய்து பொது அமைதிக்கு சீர்குலைக்கும் நபர்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்ற குற்றவாளிகள் மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.
Tags:    

Similar News