குட்கா விற்றவர் கைது

திருநாவலூரில் அத்துமீறி குட்கா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-03-02 04:09 GMT

 திருநாவலூரில் அத்துமீறி குட்கா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.  

திருநாவலுார் அருகே குட்கா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மடப்பட்டு பங்க் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது, கருவேப்பிலைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிபாலன் மகன் இளையமாறன், 26; பெட்டிக்கடையில் குட்கா விற்றது தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News