சின்னசேலத்தில் அனுமன் ஜெயந்தி விழா

கள்ளகுறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-01-12 07:57 GMT

அனுமன் ஜெயந்தி விழா

சின்னசேலம் பஸ் நிலையம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு சுவாமிக்கு 17 வகையான திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜையும், சுவாமி உள் பிரகார வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனுமன் பக்தர்கள் அனைவரும் பஜனை பாடல்கள் பாடினர். இன்று காலை 11:00 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது.
Tags:    

Similar News