பந்தலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை

Update: 2024-01-03 10:06 GMT
நீலகிரி மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் பந்தலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்பு திடீரென கன மழை பெய்ய துவங்கியது. குறிப்பாக பந்தலூர், நாடுகாணி, தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது ஆட்டோ, இருசக்கர வாகன ஓட்டிகள் ,பேருந்துகள் தேங்கி நின்ற மழை நீரில் ஊர்ந்து சென்றன. கனமழை காரணமாக கடும் குளிரும் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. .
Tags:    

Similar News