குறிஞ்சிப்பாடி பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை

குறிஞ்சிப்பாடி பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2024-06-19 00:49 GMT

கனமழை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது . இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மழையினால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News